×

கூடலூரில் அரசு, தனியார் பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

கூடலூர் : கூடலூரில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஜூனியர் ரெட்கிராஸ் சங்க மாணவர்கள் கலந்து கொண்ட டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கூடலூர் பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடத்தப்பட்ட பேரணியை சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், ஜூனியர் ரெட்கிராஸ் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் முன்னிலையில் துவக்கி வைத்தார். கூடலூர் நகராட்சி அலுவலக பகுதியில் தொடங்கிய பழைய பேருந்து நிலையம் சுங்கம் வழியாக புதிய பேருந்து நிலைய வளாகத்தில் முடிவடைந்தது.

இதில் டெங்கு விழிப்புணர்வு குறித்த கோஷங்கள் எழுப்பி மாணவர்கள் கலந்து கொண்டனர். டெங்கு கொசு மனிதர்களை கடிப்பது போல் டெங்கு கொசு முகமூடி அறிந்த மாணவர் ஒருவரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல் அடங்கிய துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா, ஜூனியர் ரெட்கிராஸ் சங்க கவுன்சிலர் புவனேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் ஜுனியர் ரெட்கிராஸ் சங்க மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post கூடலூரில் அரசு, தனியார் பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Dengue ,Junior Red Cross ,Kudalur ,Cuddalore ,Government ,Dinakaran ,
× RELATED டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்